search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் மிரட்டல்"

    நாகேசை மிரட்டியவர் தியாகதுருகம் அருகே வேங்கைவாடியை சேர்ந்த குருசாமி மகன் தேவர் (27) என்பது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கொரட்டூரை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 63). இவரது செல்போனுக்கு கடந்த 12-ந் தேதி புதிய எண்ணில் இருந்து போன் வந்தது. அதில் பேசிய நபர், வரஞ்சரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பேசுவதாக கூறி, நாகேஷை உடனடியாக போலீஸ் நிலையம் வரச்சொல்லி கூறியுள்ளார்.நான் என்ன தவறு செய்தேன், எதற்கு என்னை அழைக்கிறீர்கள் என்று நாகேஷ் கேட்டுள்ளார். தொரைக்கு எல்லாத்தையும் போன்லையே சொல்லனுமா, கிளம்பி வா சொல்கிறேன் என்று எதிர்தரப்பில் பேசியவர் மிரட்டும் தோணியில் கூறினார்.இதையடுத்து நடந்த சம்பவங்களை தனது உறவினர்களிடம் நாகேஷ் கூறினார். அவர்களின் உதவியுடன் வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டரிடம் பேசினர். தான் ஏதும் பேசவில்லையே, யாரோ உங்களை மிரட்டியுள்ளனர். மீண்டும் போன் வந்தால் உடனடியாக என்னிடம் வாருங்கள், அவனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சப்-இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.

    இதனால் நிம்மதியடைந்த நாகேஷ் தனது பணிகளை தொடர்ந்தார். மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய அதே மர்மநபர் போலீஸ் நிலையம் வரவில்லை என்றால், நேரில் வந்து முகத்தை உடைத்து விடுவேன் என்று மீண்டும் மீண்டும் மிரட்டினார்.இது தொடர்பாக வரஞ்சரம் போலீசாரிடம் நாகேஷ் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நாகேசை மிரட்டியவர் தியாகதுருகம் அருகே வேங்கைவாடியை சேர்ந்த குருசாமி மகன் தேவர் (27) என்பது தெரியவந்தது. இவருக்கும் நாகேசுக்கும் முன்விரோதம் இருந்ததும், இதனால் தேவர், நாகேஷை செல்போனில் மிரட்டியதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து தேவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • நான் உன்னை என்ன செய்கிறேன் பார் என சீருடை அணிந்திருந்த போலீஸ் என்றும் பாராமல் ஒருமையில் பேசிக்கொண்டே இருந்தனர்.
    • திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வருபவர் அறிவழகன் . இவர் திருப்பூர் மங்கலம் சாலையில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் தாடிக்காரமுக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அறிவழகன் வந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதினர். இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் சாலையில் விழுந்தனர்.

    லேசான காயம் ஏற்பட்ட நிலையில் சாலையில் இருந்து எழுந்த இருவரும் போலீஸ்காரர் அறிவழகனைப் பார்த்து கடுமையாக திட்டியதோடு நான் யார் தெரியுமா? யார்கிட்ட பேசுற, நீ எந்த ஸ்டேசன்ல வேல பாக்குற சொல், நான் உன்னை என்ன செய்கிறேன் பார் என சீருடை அணிந்திருந்த போலீஸ் என்றும் பாராமல் ஒருமையில் பேசிக்கொண்டே இருந்தனர்.

    ஒருகட்டத்தில் வாலிபர் ஒருவர், நான் நாளைக்கு பாரின் போகனும், இப்படியே எப்படி செல்வது, நீயே சொல்லு, நீ எந்த ஸ்டேசன்ல இருக்க என தனது மொபைலில் வீடியோ எடுத்தபடியே போலீஸ்காரர் அறிவழகனை மிரட்டும் வகையில் பேசினார் .

    இதையெல்லாம் கேட்டபடி பொறுமையாக பைக்கில் அமர்ந்தபடியே கேட்டுக்கொண்டிருந்த போலீஸ்காரர் அறிவழகன் செய்வதறியாது திக்குமுக்காடினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் நைசாக போலீஸ்காரர் அறிவழகனை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது

    போலீஸ் உடையில் இருந்த நபருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னாவது என அப்பகுதியில் இருந்த சிலர் பேசிக்கொண்டனர். போலீஸ்காரரை மிரட்டும் வகையில் பேசிய நபர்கள் இருவரும் யார் என திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜோதி தங்கி இருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தினர்.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜோதியிடம் வாலிபர் ஒருவர் செல்போனில் பேசி உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் சுண்டுப் பள்ளி மண்டலம் குருவப் பள்ளியை சேர்ந்தவர் ஜனார்த்தன ரெட்டி. இவரது மனைவி அருணா. தம்பதிக்கு ஜோதி என்ற மகள் இருந்தார். இவர் நாராயண வனம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தன்னுடன் விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகள் கல்லூரிக்கு சென்றனர். ஆனால் ஜோதி கல்லூரிக்கு செல்லாமல் அங்கேயே தங்கி இருந்தார்.

    கல்லூரிக்கு சென்ற மாணவிகள் கல்லூரி முடிந்து மாலை மீண்டும் அறைக்கு திரும்பினர். அப்போது அங்குள்ள அறையில் ஜோதி மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

    இதுகுறித்து கல்லூரி விடுதி நிர்வாகத்திற்கு மாணவிகள் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் மாணவி உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜோதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விடுதி நிர்வாகம் நாராயண வனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜோதி தங்கி இருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த அறையில் ஜோதி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் அவர் உருக்கமான தகவல்களை எழுதியுள்ளார். கடிதத்தில் உள்ள விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜோதியிடம் வாலிபர் ஒருவர் செல்போனில் பேசி உள்ளார். அவர் ஜோதியை திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஜோதி அழுது கொண்டே இருந்ததை பார்த்ததாக அவருடன் தங்கி உள்ள சக மாணவிகள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×